Subscribe:
மார்ச் 30௦... அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்ககோரி மாநிலம் தழுவிய தொடர்ப்பிரசார பொதுக்கூட்டதின் துவக்கம்... திருப்பூரில்... மனிதம் கொண்டோரே... ஆர்ப்பரித்து அணிதிரளுங்கள்...

புதன், 9 ஜனவரி, 2013

நீயே எங்களின் முகவரி...

தலைவா
நாங்கள் அடையாளபடுத்தபட
நீயே எங்களின்  முகவரி...

எம்முல் ஊடுருவிய உன் இலட்சியங்கள்
என்றைக்குமே தீராநதி...

நீ
எரிமலையாய் எழுந்து நின்றவன்...
எதிரிகளை எளிதாய் வென்றவன்...

நீ
சிறைகளை சிரித்த முகத்துடன் வரவேற்றவன்...
சிம்மாசனங்களை தூக்கி  எரிந்தவன்...

வீரமாய் வாழ்ந்த நீ இம்மண்ணில் உரமாகினாய்...
வீரியமாய் நாங்கள் வாழ விதையாகினாய்...

ஒவ்வொரு ஆண்டு மட்டுமல்ல ஒவ்வொரு நாளும்
உன் நினைவுடந்தான் எங்கள் பயணம்...

உன்
இலட்சியங்களை வென்றெடுக்க...
இதோ உண்ணில் இருந்து புறப்பட்ட நாங்கள்...

பிறந்தவன் இறப்பது இயற்க்கை... ஆனால்
உன்போல இறந்தும் இருப்பதுதான் பிறப்பின் வெற்றி...

அன்று நீ இன்றோ நாளையோ நாங்கள்...
என்றாவது ஒருநாள் உன் போல் ஷஹீதாகி
சந்தோசமாய் உன்னை சந்திப்போம்... இன்ஷாஅல்லாஹ் 

செவ்வாய், 25 டிசம்பர், 2012

என் தாயாருக்காக துஆ செய்யுங்கள்...

இன்று டிசம்பர் 26...

என் தாயார் சு.ஹமீதா பீவி அவர்கள் வபாத்தான (மறைந்த) நாள்...

மூன்றாண்டுகள் கடந்துவிட்டது ஆனாலும் என் தாய் இன்றும் என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு...

மரணம் என்பது மனிதவாழ்க்கையில் தவிர்க்கமுடியாதது,,, எல்லோரும் ஒருநாள் இறையவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்... என் தாய் மரணித்ததும் எதார்த்தமான ஒன்றுதான்...

என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஏழுபேர்... நான் ஆறாவதாக பிறந்தவன்... எனக்கு முன்பாக 5 சகோதரிகள்... ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என நமது கிராமபுரங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... ஆனால் என் தகப்பனார் மர்ஹும் நூ.ச.சுல்தான்மைதீன் அவர்கள் தனது கடுமையான உழைப்பால் எங்களை செல்வசெலிப்புடன் வளர்த்தினார்கள்... அதற்க்கு என் தாயாரும் சிக்கனமான சீரான வரவு செலவுகளுடன் குடும்பம் நடத்தி என் தகப்பானார் அவர்களின் எண்ணங்கள் ஈடேற துணைநின்றார்...

இளையான்குடி கீழமுஸ்லிம் தெருவில் நுழைவிலேயே அமைந்திருக்கிறது எங்கள் வீடு... பிரம்மாண்டமாக எழுந்துநின்று வருவோரை வரவேற்கும்... என் எங்கள் வீடு கட்டிமுடிக்கபட்டபோது நான் பிறந்திருக்கவில்லை... அப்போது எங்கள் தெரு கிழவிகள் என் தாயாரை ஏளனமாக பேசுவார்களாம் "அஞ்சையும் பொட்டையா  பெத்துவஜ்சுகிட்டு எதுக்கு இத்தாம்பெரிய பங்களா" என் தாயார் கண்ணிருடன் அல்லாஹுவிடம் முறையிடுவாராம்...

1973ல் நான் பிறந்தேன் என் தாயும் தந்தையும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையென எங்கள் தெருவில் வசித்த அப்பாமார்களும் மாமம்மாக்களும் சொல்லக்கேடிருக்கிறேன்... நான் ஆண்பிள்ளையாக பிறக்க வேண்டுமென எண்ணிலடங்கா பிரார்த்தனைகளுடன் வாழ்ந்திருக்கிறார் என் தாய்... ஆம் பிறந்தவுடன் தனது வேண்டுதலை நிறைவேற்ற குளக்கரையில் தேங்கிக்கிடக்கும் பாசியை வழித்து உண்டார் என என் சகோதரிகள் சொல்லியிருக்கிறார்கள்... அதனை ஒருமுறை என் தாயாரே எங்கள் வீட்டிருக்கு வந்திருந்த தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களிடம் சொல்லும்போது கேட்டிருக்கிறேன்...

எனக்கு அடுத்ததாக ஒரு தம்பி... எனக்கு 12 வயதானபோது என் தகப்பனார் அவர்கள் புற்றுநோயால் மரணித்தார்கள்... என் சகோதரிகள் ஐவரையும் நல்ல இடங்களில் மணமுடித்து கொடுத்தபிறகே ஒரு தகப்பனுக்குரிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றிய பிறகே என் "அத்தா" காலமானார்கள்... ஆண்பிள்ளை இல்லாத குடும்பம் என்பதால் என் பள்ளிக்கூட பையை பரண்மேல் போட்டுவிட்டு அப்போதே மலேசியாவிற்கு பயணமானேன்... அந்த வயதில் எனக்கு உணவகத்தில் கொடுக்கப்பட்ட வேலை தட்டு கழுவுவது... குவளைகளை கழுவது... கழிப்பறைகளை சுத்தம் செய்வது... மாத சம்பளம் இந்திய ரூபாய் 500
அந்த சொற்ப பணத்திலும் என் தாய் என் தம்பிக்கு வேண்டியதை செய்துவிட்டு என் சகோதரிகளுக்கும் எந்தக்குறையும் இல்லாமல் பார்த்துகொண்டார்...

எல்லா தாய்மார்களும் தங்களது பெண்பிள்ளைகள்  மேல்தான் அதிகமான அன்புகாட்டுவார்கள் என நான் கேள்விபட்டிருக்கிறேன்... ஆனால் என் தாய்க்கு நானும் என் தம்பியும் தான் எல்லாம்... கவலையே என்னவென்று தெரியாமல் எங்களை வளர்த்திட்ட எங்கள் தாய்... மகனை மணக்கோலத்தில் காணவேண்டும் என்கிற ஆவலில் எனது 20வது வயதிலேயே எனக்கு மணமுடித்தார்கள்... அடுத்து என் தம்பிக்கும் திருமணமானது...

என் சகோதரிகள் ஏதோ ஒரு சூழலில் என் தகப்பனார் மிதிவண்டியில் பலகாரவகைகளை தயாரித்து எடுத்துகொண்டு பல மையில்கள் சுற்றி அலைந்து விற்று ஈட்டிய பொருளில் கட்டிய எங்கள் மாளிகையை விற்க வேண்டுமென ஆர்வம் காட்டினார்கள்... இறுதியாக அவர்களின் ஆர்வமமே வென்றது... என் தாயார் மனத்தால் அன்றைக்கே இறந்துவிட்டார்... இறுதி காலங்களில் என் தாயார் என் சகோதரிகள் மற்றும் என் தம்பியுடன்தான் வசித்தார்கள்... நான் தனியாக (சொந்த வீட்டை இழந்துவிட்டோம் என்கிற விரக்தியில்) வசித்தேன்...

ஒரு நாள்... மலேசியாவில் நள்ளிரவு என் அக்கா எனது அலைபேசிக்கு அழைப்புவிடுத்தார் அம்மா உன்னிடம் பேச வேண்டுமாம் என்றார்...

என் அம்மாவிடம் பேசினேன் இபுராஹிம் நல்ல இருக்கியாமா... என் தாயாரின் குரலில் எப்போதும் உள்ள கம்பீரம் இல்லை... அம்மா நான் நல்ல இருக்கேமா நீங்கள் நல்ல இருக்கீங்களா? நல்ல இருக்கேன்மா ஆனா அம்மா இன்னும் ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டேன்மா... உன்னை பார்க்கணும்போல இருக்கு அம்மா மவுத்தா போறதுக்குள்ள வந்து பார்த்துரும்மா... என்றார்கள்... அம்மா அப்படியெல்லாம் பேசாதீர்கள் அல்லாஹ் உங்களுக்கு எந்த கஷ்டத்தையும் தரமாட்டான்... இன்ஷாஅல்லாஹ் நான் எப்படியும் ஒரு வாரத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வைத்தேன்...

மறுநாள் காலை வழக்கம்போல பரபரப்பான வேலைகளில் நான் மூழ்கி இருந்த வேலை என் மனைவியிடமிருந்து அழைப்பு... ஹலோ என்றேன் என் மனைவியின் குரல் அழுகையாகமட்டுமே கேட்டது என்ன என்றேன்... மாமி (என் அம்மா) இறந்துவிட்டார்கள் என்றால்... என் இதயம் சில நிமிடங்கள் தனது இயக்கத்தை நிறுத்தியது... என்னையறியாமல் என் விழிகளில் கடலின் கொந்தளிப்பு கொப்பளித்து... சில மணிநேரங்களுக்கு முன்பாக என்னிடம் பேசிய என் தாய் இறந்துவிட்டார் என்கீற செய்தியை என்னால் நம்பமுடியவில்லை...

என்னை திடபடுத்திகொண்டு உடனடியாக தாயகம் நோக்கி பயணமானேன்...

என் வருகைக்காக என் சொந்தங்கள் நண்பர்கள் என ஒரு பெரும் கூட்டமே காத்திருந்தது... என்னை கண்டதும் என் சகோதரிகளின் வெடித்துசிதறிய அழுகுரல் என்னை சுக்குநூறாய் சிதரசெய்தது... எப்போதும்  நான் தாயகம் வந்துவிட்டால் வாசலில் வந்து நின்று என்னை ஆரத்தழுவி வரவேற்கும் என் தாய் இப்போது என் சகோதரியின் வீட்டு மத்தியில் கிடத்திவைக்கபட்டு இருந்தார்...

எங்கள் அம்மா அல்லாஹுவின் அழைப்பை ஏற்றுகொண்டார்... இனி நான் செய்யவேண்டியது என் தாயின் மறுமை வாழ்விற்கான துஆக்கள்தான்... ஆனால் என் மனதில் இன்றைக்கும் உருத்திகொண்டிருக்கும் எண்ணம் நான் என் அம்மாவிற்கு செய்யவேண்டிய கடமைகளை முழுமையாக செய்தேனா??? என் அம்மா எங்களுக்காக செய்த தியாகங்கள் சொல்லிமாளாது...

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் என் தாயார் இந்த உலகவாழ்க்கையை நிறைவு செய்து பயனபட்டார்கள்...

தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்கள் என் தாயார் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார் என் தாயாரும் என் மூத்தமகன் பழனிபாபா தான் என பெருமையாக சொல்வார் தலைவர் பாபா ஒருமுறை என் தாயாரிடம் சொன்னார் நீங்க ஏனம்மா கவலைபடுறீங்க... நீங்க ஒரு நல்ல பிள்ளைக்கு தாய் என்பதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்... ஆம் என் தாயாரை யாரும் குறைசொல்லமுடியாதபடி நானும் என் கடமையை செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்... இருப்பினும் நான் என் தாயாரின் மனம் நோகும்படி நடந்திருந்தால் அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டி துஆ செய்யுங்கள் என் இனமான உறவுகளே... அதேபோல என் அம்மா அத்தா ஆகியோரின் சுவன வாழ்க்கையை அல்லாஹு பிரகாசமாகிவைத்திட துஆ செய்யுங்கள்...

வேங்கை.சு.செ.இப்ராஹிம்


ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அத்துணை இன்னல்களுக்கும் தீர்வு அரசியல் அதிகார வென்றெடுப்பே... வேங்கைஇப்ராஹீம் பேச்சு...

வேங்கை சு.செ.இப்ராஹீம் உரையாற்றுகிறார்...

திரண்ட மக்கள் திரளில் ஒரு பகுதி...
செப்டம்பர் 29ம் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகர இந்திய தேசிய லீக் கட்சியின் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்
அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சகோ.இப்ராஹீம் உஸ்மானி அவர்கள் தலைமையில் நடைபெற்றது 
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வேங்கை சு.செ.இப்ராஹீம் அவர்களின் உரையில் இருந்து...

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல உலககெங்கிலும் பயங்கரவாததிற்கு எதிராக போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்... அதற்க்கு சரியான சான்றுதான் அண்மைய அமெரிக்க இணையதள குறும்படம்... ஆம் என் சமுதாய சொந்தங்களே நமது ஒப்பற்ற ஒரே தலைவர் அண்ணல் நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரித்து அமெரிக்க ஆதரவுடன் படமெடுத்த யூதநாயை கண்டித்து இப்போது நாம் உலகமெங்கும் ஆர்பாட்டங்கள் பேரணிகள் என்று வீரியமாக நடத்தி வருகிறோம்... இதில் நமது தமிழக முஸ்லிம்கள் நெஞ்சை நிமிர்த்திகொள்ளுங்கள் காரணம் உலக வல்லரசான அமெரிக்காவின் துணைதூதரகத்தை உலகிலேயே இயங்கவிடாமல் செய்த பெருமையை சென்னையில் நமது சகோதரர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள்... 

சமுதாய சொந்தங்களே... இந்த அமெரிக்க படத்தின் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச பயங்கரவாததிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிடுகிறது என்பதை நாம் உணரதவறககூடாது... ஆம் செல்வசெழிப்பாக திகழ்ந்த ஈராக் இன்றைக்கு எந்த நிலையில் உள்ளது அங்குள்ள நமது சகோதரிகள் தங்கள் பிள்ளைகளின் உணவு மருத்துவதிற்க்காகாக தங்கள் உடல் உறுப்புகளை விற்று வாழக்கூடிய அவலம் இதனை யார் ஏற்படுத்தியது...? உலகை அச்சுறுத்தக்கூடிய ஆயுதங்களை பாரசீக சிங்கமென ஈராக்கை ஆட்சிபுரிந்த அதிபர் சதாம் ஹுசைன் பதுக்கிவைத்துள்ளார் என்கிற பொய் கதையை புனைந்து உலக பயங்கரவாதி அமேரிக்கா ஈராக்கின் மீது தாக்குதல் நடத்தினான்... அதிபர் சதாம் ஹுசைன் அவர்களின் பல் இடுக்குகளில் கூட ஆயுதங்களை தேடிய அமேரிக்கா முடிவில் உலக முஸ்லிம்கள் அனைவரும் தியாகப்பெருநாள் கொண்டாட்டங்களில் இருந்தபோது சதாம் ஹுசைன் அவர்களை தூக்கிலிட்டு கொலை செய்தான்... ஆம் அவனது நோக்கம் நச்சு ஆயுதங்களை கலைவதல்ல தனக்கு அடிபணிய மறுக்கும் சதாம் ஹுசைனை அழிப்பதே... அதில் வெற்றியும் கண்டான் இன்று அவனது காலனியின் கீழ் ஈராக் செல்வம் கொழித்த அந்த இஸ்லாமிய பூமி இன்று பசியாலும் பஞ்சத்தாலும்... 

செப்டம்பர் பதினொன்று அமெரிக்க இரட்டைகோபுர தாக்குதலை காரணமாக காட்டி ஒசாமா பின் லேடனை பிடிக்க வேண்டும் என்கிற போர்வையில் தாலிபான்களை ஒழிக்க வேண்டுமென்கிற பொய்மையில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தான்... அந்த சிறிய இஸ்லாமிய தேசத்தை சிதைத்து கைப்பற்றினான்... லிபியா வீரத்தின் விலைநிலமாக திகழ்ந்த கர்னல் கடாபியை ஒரு நாயை அடித்துகொல்வது போல அந்நாட்டின் சொந்த மக்களை கொண்டே கொலை செய்தான்... இன்றைக்கு அவனது அடிமை அரசாங்கம் அங்கு... அடுத்து அவனது இலக்கு சிரியா...ஈரான் என தொடர்கிறது... இந்த அயோக்கியத்தனங்களை போது சமூகம் தட்டிகேட்டுவிடக்கூடாது என்பதினால் உலக முஸ்லிம்களின் மீது பயங்கராவாத முத்திரையை குத்திட அமெரிக்கன் செய்திட்ட  சதிதான் நபிகள் நாயகம் அவர்கள் பற்றிய படம்... 

அப்படத்தை முதலில் ஆங்கில மொழியில் வெளியிட்டது யூதூப் அது அவர்கள் எதிர்பார்த்த அளவில் முஸ்லிம்களிடம் செல்லவில்லை என்பதனால் உடணடியாக அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து இணையத்தில் உலவவிட்டனர்... அவர்கள் எதிர்பார்த்து போலவே அரபுதேச மக்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது அப்படம் தங்கள் தலைவரை இழிவுபடுத்திய அச்செயலை கண்டித்து போராடிவரும் முஸ்லிம்களை போது சமூகத்தளங்களில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வேலைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று செய்து வருகிறது... பேடித்தனமாக சிறிய இஸ்லாமிய தேசங்களை நாசபடுத்திவரும் அமெரிக்க ஆண்மை இருந்தால் அவனுக்கு எதிராக உலக வல்லரசாக உருவாகிவரும் சீனாவின் மீது தாக்குதல் தொடுக்கவேண்டும்... மாறாக வலிமைகுன்றிய இஸ்லாமிய தேசங்களின் வளங்களை அழிப்பதன் மூலமாக உலக முஸ்லிம்களை ஒழிக்க திட்டமிடுகிறான்... அல்லாஹுவின் பாதையில் பயணிக்கும் இஸ்லாமிய சமுதாயம் இந்த அயோக்கியத்தனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கும்... 

நமது இந்தியதேசத்தை பொறுத்தவரை சங்கபரிவாரங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரான நிலையில் இல்லை... அனைத்து அதிகாரவர்க்கமுமே முஸ்லிம்களுக்கு எதிர்நிளைபாட்டில் தான் இருக்கிறார்கள்... கடந்த அய்யாவின் ஆட்சிகாலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்துமே அம்மாவிற்கு பிடிக்கவில்லை... சுமார் ஆயிரம்கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு சென்னையின் மையப்பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தலைமை செயலக கட்டிடம் இப்போது பாம்புகளும் பல்லிகளும் குடியிருக்கும் கூடாரமாகிபோனது ஏன்? அது அய்யாவின் இலட்சியகனவாக கட்டப்பட்டது ஆகையினால் அம்மாவிற்கு பிடிக்கவில்லை இன்று ஆயிரம்கோடி அனாமத்தானது... வரலாற்று சிறப்புமிக்க அறிவுகளஞ்சியமாக உருவானது அண்ணா நூற்றாண்டு விழா நூலகம்... இன்று இல்லை காரணம் அய்யாவினால் உருவாக்கப்பட்டது அம்மாவிற்கு பிடிக்கவில்லை ஆகவே இப்போது நூலகம் இல்லை... ஏழை எளிய மக்களின் சுகாதார சொர்க்கமாக உருவானது கலைஞர் காப்பிட்டு திட்டம் அய்யா உருவாக்கினார் என்பதினால் அம்மாவிற்கு பிடிக்கவில்லை அத்திட்டம் இப்போது நடைமுறையில் இல்லை... ஆக இப்படியாக அய்யா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எதுவுமே அம்மாவுக்கு பிடிக்கவில்லை... அதனால் அய்யாவினால் சிறையிளடைக்கபட்டு பல்லாண்டுகாலமாக வாடும் அப்பாவி முஸ்லிம்கள் அம்மாவினால் விடுவிக்கபடுவார்கள் என முழுமையாக நம்பினோம்... கடந்த வருட நோன்பு பெருநாளைக்கூட நாங்கள் மகிழ்ச்சியாக எதிர்பார்க்கவில்லை மாறாக செப்டம்பர் பதினைந்தைதான் எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமடைந்தோம்... ஒரு உண்மை விளங்கியது முஸ்லிம்களின் பிரச்சனை என்றால் அய்யாவானாலும் அம்மாவானாலும் அனைவரின் நிலைபாடும் ஒன்றுதான்... 

இன்று நமது சமூக விடியலுக்காக போராட வீரியமான பல்வேறு அமைப்புகள் உண்டு... ஆம்புலன்ஸ் அர்பணிப்புகள்... இரத்தனதான நிகழ்வுகள்... ஆர்பாட்டங்கள்...பேரணிகள்..பொதுக்கூட்டங்கள்...மாநாடுகள் என களமாடும் சமுதாய அமைப்புகளின் நிலைகளில் நமக்கு மிகுந்த மரியாதை உண்டு... ஆனால் இவற்றால் நாம் எந்த இலக்கை அடைந்துள்ளோம்... சிந்தித்து பாருங்கள்... ஒன்றுமில்லை... இவற்றில் எதுவுமே செய்யாமல் எப்படி மற்ற சமூக மக்களால் சுமூகமாக வாழமுடிகிறது? சிந்தித்து பாருங்கள்... ஆம் அவர்களிடம் உள்ள அரசியல் தெளிவு நம்மிடம் இல்லை... இன்றைக்கு நமது சமூகத்திற்கு தேவை அரசியல் அதிகாரம்... அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதன் மூலமாக மட்டுமே நம்மால் அடுத்த தலைமுறை சமுதாயத்திற்கு விடியலை உருவாக்கிட முடியும்... ஆகவே என் இனமான உறவுகளே... நீங்கள் எந்த அமைப்புகளில் வேண்டுமானாலும் பங்காற்றுங்கள்... எந்த கொடியை வேண்டுமானாலும் தூக்கிபிடியுங்கள்...எந்த கொள்கையில் வேண்டுமானாலும் நிலையாக இருங்கள்... ஆனால் ஒன்றை மட்டும் உங்கள் தலைமைகளிடம் வலியுறுத்துங்கள் ஆம்... எங்களுக்கு அரசியலை கற்றுத்தாருங்கள்... எங்களை அமைப்பாக்குங்கள்...அரசியல் படுத்துங்கள் என்பதை வலியுறுத்துங்கள்... அரசியல் அதிகாரத்தை பெறாதவரை நாம் தீவிரவாதிகளாகத்தான் அதிகாரவர்க்கத்தால் ஊடகங்களால் வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கபடுவோம்... வெங்காய வியாபாரிகள்கூட வெளிநாட்டு உளவாளிகளாக உருவாக்கபடுவோம்... 

தமிழ் தேசத்தில் காங்கிரஸ் அரசை வீழ்த்தி இன்றைக்கு திராவிட ஆட்சி உருவாகிட காரணமாக திகழ்ந்தவர் கண்ணியதலைவர் காயிதே மில்லத் அவர்கள்... அவரைவிடவா ஒரு அரசியல் ஆசான் நமக்கு வேண்டும்? அவரை படித்தாலே நமது சமூகம் அதிகாரத்தை இன்ஷாஅல்லாஹ் வெல்லும்... சமூகப்புரட்சியாளர் ஷஹீத் பழனிபாபா எத்தகைய தூரநோக்கு திட்டத்துடன் அரசியல் களமாடினர்... அதனைவிடவா ஒரு வீரிய திட்டமிடல்  நமக்கு வேண்டும்... அவற்றை படித்தாலே இன்ஷாஅல்லாஹ் நாம் அடுத்த இலக்கை அடைந்துவிட முடியும்... அரசியல்படுவோம்...அமைப்பாய் திரள்வோம்...அதிகாரம் வெல்வோம்...